ஜோன்சன் & ஜோன்சன் கோவிட்19 ஒற்றைத் தடுப்பூசி தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் மதிப்பாய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசியின் செயல் திறன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படும் மூன்றாவது கோவிட்19 தடுப்பூசியாக இது அமையவுள்ளது. அனேகமாக அடுத்த சில நாட்களில் இந்தத் தடுப்பூசி பயன்பாட்டுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளுக்கு மாற்றான குறைந்த செலவுகொண்ட தடுப்பூசியாக ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி இருக்கும். அத்துடன், சாதாரண குளர்சாதனப் பெட்டியில் வைத்து இதனைப் பயன்படுத்த முடியும் என்பதால் இது இலகுவானதாகவும் இருக்கும்.
கொரோனா தொற்று நோயின் கடுமையான தாக்கத்தைக் குறைப்பதில் 85% ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி பயனுடையதாக உள்ளதாக அமெரிக்க உணவு, மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உணவு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நிபுணர் குழு நாளை வெள்ளிக்கிழமை கூடி இந்தத் தடுப்பூக்கு அங்காரம் அளிக்கப்படுமா? என்ற முடிவை அறிவிக்கவுள்ளது.
அங்கீகாரம் அளிக்கப்பட்டால் உடனடியாக 40 இலட்சம் தடுப்பூசிகளைக் தயாரிக்க தயாராக இருப்பதாக ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், மார்ச் இறுதிக்கும் சுமார் 3 கோடி தடப்பூசிகளைத் தயாரித்து உலகெங்கும் விநியோகிக்க முடியும் எனவும் அந்த நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா