Friday 26th of April 2024 01:56:04 PM GMT

LANGUAGE - TAMIL
-
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிற்றூழியர் தர ஊழியர்கள் போராட்டம்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிற்றூழியர் தர ஊழியர்கள் போராட்டம்!


நாடுபூராகவும் சுகாதார திணைக்களத்தின் சிற்றூழியர்கள் என வகைப்படுத்தப்பட்ட மேற்பார்வையாளர்கள், பரிசோதகர்கள், சுகாதார சிரேஸ்ட கனிஸ்ர ஊழியர்கள், தொலைபேசி பரிவர்த்தனையாளர்கள்,சாரதிகள் , உட்பட்ட சிற்றூழியர்கள் வகைப படுத்தப்பட்டவர்கள் நேற்றிலிருந்து நாடு பூராகவும் சுகயீன விடுப்புப் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையில் இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிற்றூளியர் தர ஊழியர்கள் சுகாதார சேவையில் முறையற்ற நியமனங்களை நிறுத்தக்கோரியும், சிற்றூழியர்களுக்கு மட்டுமேயான இலத்திரனியல் கைவிரல் பதிவை அனைவருக்குமாக்குமாறும், தமக்கு வழங்கப்படவேண்டிய பதவி உயர்வு, கொடுப்பனவு உயர்வு, வழங்க கோரியும், இன்றையதினம் காலை 10:30 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை ஒருதொகுதி உறுப்பினர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏனையோர் சுகயீன விடுப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE