Friday 26th of April 2024 08:05:02 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டும்  அனுமதி!

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டும் அனுமதி!


யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்தார் .

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையானது வடக்கு மாகாணத்தில் உள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் பெரும் பங்காற்றியது. இந்நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட சில தடங்கல் நிலை காரணமாக எமது வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

எனினும் யாழ் போதனா வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் மீளஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சிறீ பவானந்தனாஜா தெரிவித்தார்.

யாழ்போதனா வைத்தியசாலையில் அண்மையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் சில பிரிவுகள் மூடப்பட்ட தோடு தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் தற்போது அந்த நிலைமை மிகவும் விரைவாக முன்னெடுக்கப்பட்டு எதிர்வரும் 5 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட வுள்ளதோடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களைப் பார்வையிட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE