முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக் குழு அமர்வானது இன்றைய தினம் (02.03.2021) மாலை 2 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது பாராளுமன்ற உறுப்பினரும் முல்லை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அதிகாரிகள், அலுவலர்கள், கிராம அமைப்புக்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு