ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 1.44 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.
கொவெக்ஸ் என்பது குறைந்த மற்றும் இடைநிலை வருமானங்களை பெறும் 92 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்காக ஐ.நாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு வேலைத்திட்டமாகும்.
இதன்கீழ் இலங்கைக்கு 14 இலட்சத்து 40 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.
அதன் முதல்கட்டமாக 2 இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் ஞாயிற்றுகிழமை இலங்கை வந்தடையவுள்ளன.
இந்த தடுப்பூசிகள் அபாயகர வலயத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
கொவெக்ஸ் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் யுனிசெப்பினால் இந்த வருடத்தில் பல நாடுகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளது.
இவ்வாறு இலங்கைக்கு வழங்கப்படும் முதல் கொரோனா தடுப்பூசிகள் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை