நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கான கொரோனா வைரஸ் தடுப்பூசியை ரஷ்யா தயாரித்துள்ளது.
‘காா்னிவாக்-கோவ்’ (Carnivak-Cov) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி உலகில் விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தினால் 6 மாதங்களுக்கு அவற்றுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும் என ரஷ்யாவின் விவசாய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
‘காா்னிவாக்-கோவ்’ விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி கடந்த ஒக்டோபா் மாதத்திலிருந்து நாய்கள், பூனைகள், நரிகள் உள்ளிட்ட விலங்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த மாதத்திலிருந்து இந்தத் தடுப்பூசி பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்ய விவசாய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவி புதிய பிறழ்வுகள் ஏற்படுவதைத் தடுக்க காா்னிவாக்-கோவ் தடுப்பூசி உதவும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்