நீண்ட இழுபறியின் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை தனியான பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பந் அமரதுங்க அறிவித்துள்ளார்.
வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான தீர்மானத்தினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பிலான அறிவித்தல் இந்த மாதம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய பல்கலைக்கழத்தில் தற்போது உள்ள பீடங்களுக்கு மேலதிகமாக புதிதாக இரண்டு பீடங்களை அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆட்சிக்காலங்களின் போது ஒவ்வொரு கல்வி அமைச்சரும் இது குறித்த அறிவித்தல்களை விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துவந்திருந்தமை தெரிந்ததே.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா