Wednesday 8th of May 2024 04:29:03 PM GMT

LANGUAGE - TAMIL
.
மகனைத் தேடிய தந்தை மரணம்! தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் துயரம்!

மகனைத் தேடிய தந்தை மரணம்! தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் துயரம்!


வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டிருந்த தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் மகனை காணாமலேயே சுகவீனம் காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.

வவுனியா தாலிக்குளம் பகுதியை சேர்ந்த சந்தணம் ராகவன் வயது 65 என்ற தந்தையே மரணமடைந்துள்ளார்.

இவரது மகன் ராஜ்குமார் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் .

அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடிப்பதற்காக தொடர்ச்சியாக போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE