பனையால் வீழ்ந்த சீவல் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கரவெட்டி மேற்கு, கௌடானை பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் விவிராசா 53 என்பவரே மரணமடைந்தவராவார்.
நேற்று காலை சீவல் தொழிலுக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் பனை மரத்திலிருந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கரவெட்டி