இலங்கையில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ள நிலையில் மொத்த தொற்று 94 ஆயிரத்தை கடந்துள்ளது.
இலங்கையில் இன்றைய தினம் மேலும் 260 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்து 94 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை