Friday 26th of April 2024 09:16:57 AM GMT

LANGUAGE - TAMIL
-
முழு உலகையும் புரட்டிப் போடும் கொரோனா; 136,643,046 பேருக்கு தொற்று! 2,949,41 பேர் பலி!

முழு உலகையும் புரட்டிப் போடும் கொரோனா; 136,643,046 பேருக்கு தொற்று! 2,949,41 பேர் பலி!


உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று நோயின் மூன்றாவது அலையில் சிக்கித் தவித்துவரும் நிலையில் உலகெங்கும் தொற்று நோயாளர் தொகை விறு-விறுவென அதிகரித்து 13 கோடியே 66 இலட்சத்து 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அத்துடன், உலகெங்கும் கொரோனாவுக்குப் பலியானோர் தொகையும் இன்று 29 இலட்சத்து 49 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் தொற்று நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் முதல் 5 இடங்களில் உள்ளன.

அமெரிக்காவில் இன்றுவரை 3 கோடியே 19 இலட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 இலட்சத்து 75 ஆயிரத்து 829 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று உறுதியான 2 கோடியே 44 இலட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் 1 கோடியே 35 இலட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 இலட்சத்து 70 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 1 கோடியே 21 இலட்சத்து 53 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.

பிரேசிலில் 1 கோடியே 34 இலட்சத்து 82 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை, 3 இலட்சத்து 53 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இங்கு தொற்று உறுதியானவர்களில் 1 கோடியே 18 இலட்சத்து 81 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் தொற்று நோய் மீண்டும் தீவிரமடைந்துவரும் நிலையில் அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்து 59 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இங்கு கொரோனா மரணங்களும் ஒரு இலட்சத்தை நெருங்கி வருகின்றன. இன்றுவரை பிரான்ஸில் 98 ஆயிரத்து 750 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

ரஷ்யாவில் இன்றுவரை 46 இலட்சத்து 41 ஆயிரத்து மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை, 1 இலட்சத்து 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 42 இலட்சத்து 65 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.

இதனைவிட இங்கிலாந்தில் 43,69,775 பேர், துருக்கியில் 38,49,011, இத்தாலியில் - 37,69,814, ஸ்பெயினில் - 33,47,512, ஜேர்மனியில் - 30,09,541 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், போலந்தில் - 25,74,631, கொலம்பியாவில்- 25,36,198, ஆர்ஜெண்டினாவில் 25,32,562, மெக்சிக்கோவில் - 22,78,420, ஈரானில் - 20,70,141 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உலங்கெங்கும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்ந்தும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 66 இலட்சத்து 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவா்களில் 10 கோடியே 98 இலட்சத்து 57 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றுவரை வெளியான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தற்போதே உலகெங்கும் 2 கோடியே 38 இலட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் தொற்று நோயுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவா்களில் 1 இலட்சத்து 3 ஆயிரத்துக்கு அதிகமானோரின் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE