2ம் மொழி சிங்கள பயிற்சியின் 2021ம் ஆண்டுக்கான 6வது அணி இன்று வெளியேறியது. கிளிநொச்சியில் அமைந்துள்ள வட மாகாண மொழி பயிற்சி நிலையத்தில் இன்று 2ம் மொழி சிங்களத்தினை கற்று 43பேர் வெளியேறியுள்ளளனர்.
150 மணித்தியாளங்களைக்கொண்ட குறித்த மொழி கற்கையானது அரச திணைக்கள ஊழியர்களிற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகும். அரச கரும மொழிகளை அனைத்து அரச ஊழியர்களிற்கும் வழங்கும் வகையில் 2ம் மொழி அரச ஊழியர்களிற்கு கட்டாயப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் 2ம் மொழி கற்கைக்கு வசதியாக குறித்த கற்கை வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாண்டில் 150 மணித்தியாள கற்கையை முடித்து 6வது அணி வெளியேறியுள்ளது. அதன் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
இதன்போது சிங்கள கலை கலாச்சார விழுமியங்களை தாங்கிய வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்றைய தினம் 43 தமிழ் அரச ஊழியர்கள் 2ம் மொழி சிங்களத்தை முடித்துக்கொண்டு வெளியேறினர்.
குறித்த நிகழ்வில் சிங்கள மொழியில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி