கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களில் மேலும் ஆயிரத்து 363 பேர் நாடு திரும்பியுள்ளனர.
இன்று (ஏப்-21) காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் இவ்வாறு ஆயிரத்து 363 பேர் நாடுதிரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் 24 விமானங்கள் கூடாக இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
கட்டாரில் இருந்து 173 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 232 பேரும் நாடுதிரும்பியுள்ளனர்.
இதேவேளை, குறித்த 24 மணி நேரத்தில் இலங்கையில் இருந்து ஆயிரத்து 345 பேர் வெளிநாடுகளுக்கு பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.