Friday 26th of April 2024 10:36:49 AM GMT

LANGUAGE - TAMIL
.
39 வயதுடைய ஆணொருவர் உட்பட மேலும் ஐவரை பலியெடுத்தது கொரோனா!

39 வயதுடைய ஆணொருவர் உட்பட மேலும் ஐவரை பலியெடுத்தது கொரோனா!


இலங்கையில் 39 வயதுடைய ஆணொருவர் உட்பட மேலும் ஐவர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரசாஙகத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

செவணகல பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான ஆண் ஒருவர் கடந்த ஏப்ரல்-18ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த, 80 வயதான ஆண் ஒருவர் கடந்த ஏப்ரல்-19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த, 66 வயதான ஆண் ஒருவர் கடந்த ஏப்ரல்-19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர் கடந்த ஏப்ரல்-20ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த, 39 வயதான ஆண் ஒருவர் கடந்த ஏப்ரல்-20ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த இவருக்கு வேறு எந்த நோய் பாதிப்பும் இல்லாதிருந்த நிலையில், கொவிட்-19 நியூமோனியா நிலையினால் ஏற்பட்ட குருதி விஷமடைவு அதிர்ச்சி காரணமாகவே உயிரிழப்பு சம்பவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 625 இல் இருந்து 630 ஆக அதிகரித்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE