Friday 26th of April 2024 03:41:22 AM GMT

LANGUAGE - TAMIL
-
16 எருமை மாடுகளை காவு கொண்ட கடுகதி புகையிரதம்!

16 எருமை மாடுகளை காவு கொண்ட கடுகதி புகையிரதம்!


வவுனியா ஓமந்தை பகுதியில் 16 எருமை மாடுகளை கடுகதி புகையிரம் இன்று காலை மோதியதில் அனைத்து மாடுகளும் பலியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதமே ஓமந்தை பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியது.

இதன் காரணமாக பல இலட்சம்பெறுமதியாக 16 எருமை மாடுகள் குறித்த இடத்திலேயே பலியாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் மேச்சல் தரை இன்மையால் பலரும் தமது மாடுகளை மேச்சலுக்காக வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அவை வீதியோரங்கள் புகையிரத வீதிகளுக்கு அருகிலேயே இரை தேடி வரும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த புகையிரதமே திருநாவல்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளிலும் மோதியமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE