Friday 26th of April 2024 11:07:33 AM GMT

LANGUAGE - TAMIL
.
இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட உள்ள இடம் தொடர்பான அறிவிப்பு!

இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட உள்ள இடம் தொடர்பான அறிவிப்பு!


மேலும் பல கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து இன்று நள்ளிரவு முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டி பொலிஸ் அதிகாரப் பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, குளியாப்பிட்டி நகர் எல்லை, கஹதுல்ல, பஹல வீரஒவ, சேனாதிகம மற்றும் துன்மோதர ஆகிய பகுதிகள் இன்று (22) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் சடுதியாக கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையே இந்த பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணம் எனவும், நிலமை மேலும் வலுவடையுமாக இருந்தால் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக குளியாப்பிட்டிய சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE