2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகியிருந்த நிலையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
அவரது இசட் புள்ளி 2.9422 ஆகும். அவர் தேசிய நிலையிலும் யாழ்ப்பாணம் மாவட்ட நிலையிலும் முதலிடம் பெற்று வரலாற்றுப் பதிவு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்திற்குட்பட்ட சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் மாணவன் தனராஜ்-சுந்தர்பவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், தென்மராட்சி