இலங்கையில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 436 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
முகக்கவம் அணியாது நடமாடியமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஒக்டோபர்-30 முதல் கைது செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 5 ஆயிரத்து 922 ஆக அதிகரித்து ஆறாயிரத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை