முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி உடைக்கப்பட்டமை மற்றும் நாட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த நினைவுக் கல் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினரால் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை தொடர்பிலான தகவல் வெளியாகிய பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் முள்ளிவாய்க்கால் சென்று சம்பவ இடத்தினைப் பார்வையிட்டதுடன் முறைப்பாட்டுக்காகச் சென்ற பொதுக்கட்டமைப்பினருடன் பொலிஸ் நிலையத்துக்கும் சென்றிருக்கின்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முள்ளிவாய்க்கால்