இலங்கையில் மேலும் 42 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் கொரோனா தொற்று நோயியல் பிரிவு குறித்த அறிவிப்பினை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
இதனால் இதுவரையில் இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1405 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே,
இலங்கையில் இன்று மட்டும் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2877 என்றும் இதுவரையில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 180, 538 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை