இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவிய கொரோனா தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்திருக்கிறது. தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் பதிவிட்டு கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக்கொண்டுள்ளனர். இதனை தனது மகனுடன் செல்பி எடுத்து சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா