Friday 26th of April 2024 11:44:00 PM GMT

LANGUAGE - TAMIL
-
மிருசுவிலில் பிள்ளையார் கோவில் இனந்தெரியாதோரால் இடித்தழிப்பு!

மிருசுவிலில் பிள்ளையார் கோவில் இனந்தெரியாதோரால் இடித்தழிப்பு!


யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மிருசுவில் பகுதியில் வீதியோரத்தில் காணப்பட்ட சிறிய பிள்ளையார் கோவில் கடந்த இரவு இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஏ - 09 நெடுஞ்சாலையில் கொடிகாமத்துக்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவில் குறித்த பிள்ளையார் ஆலயம் காணப்பட்டது.

இந்நிலையில் இன்று காலையில் மக்கள் அவதானித்தபொது ஆலயம் இடிவடைந்து காணப்படுகின்றமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE