இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் பயணத்தடை விலக்கிக் கொள்ளப்படுவது தொடர்பான விசேட அறிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 04.00 மணிவரை நீடிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த நடமாட்டத்தடை நீடிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானதெனவும், முன்னர் தீர்மானிக்கப்பட்டவாறு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 04.00 மணியுடன் பயணத்தடை நீக்கப்படும் என நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அது தொடர்பில் இன்று அவர் கருத்து தெரிவிக்கும் போதே இன்று அல்லது நாளை விசேட அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் பின்பற்றப்பட வேண்டிய முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டதன் பின்னர் மக்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய செயற்பட வேண்டும். அத்துடன் கட்டுப்பாடுகளுக்கு அமையவே நடமாட்டத்தடை தளர்த்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை