Tuesday 7th of May 2024 09:03:33 PM GMT

LANGUAGE - TAMIL
.
ரணிலின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது!

ரணிலின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது!


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைலவர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் அறிவிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் குறிக்கப்பட்ட ஆவணத்தை, ஐக்கிய தேசியக் கட்சி அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கையளித்திருந்தது.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.

இந்தக் கூட்டத்தின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலுக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பதற்காக, அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE