கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் இருந்து இந்தியாவின் 'டெல்டா' திரிபு வைஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த மூவர் குணமடைந்துள்ளதாகவும் மேலும் இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெமடகொட பிரதேசத்தில் 'டெல்டா' திரிபுடன் அடையாளம் காணப்பட்ட 5 தொற்றாளர்களில் 3 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் மாத்திரமே தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அதேவேளை 'டெல்டா' திரிபுடன் அடையாளம் காணப்பட்ட யாரும் கொவிட் 19 தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் இல்லை. எனவே பொதுமக்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதை புறக்கணிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை, கொழும்பு