Thursday 25th of April 2024 10:20:38 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்கு தொற்றுறுதி!

யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்கு தொற்றுறுதி!


யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 720 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவற்றின் விபரம் வருமாறு,

யாழ்.மாவட்டத்தில் 11 பேர்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் 03 பேர்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 07 பேர்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 06 பேர்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர்,

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் ஒருவர்,

அவர்களுடன்,

கிளிநொச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 05 பேர்,

புதுக்குடியிருப்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 03 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE