முல்லைத்தீவு உட்பட 5 மாவட்டங்களில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 6.00 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, முல்லைத்தீவு, கேகாலை, இரத்தினபுரி, காலி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சில கிராம சேவகர்கர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில்
நாயாறு பொலிஸ் பிரிவில் செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவு
கோலை மாவட்டத்தில்
கேகாலை பொலிஸ் பிரிவில் மலவிட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஒரு பகுதி
இரத்தினபுரி மாவட்டத்தில்
அயகம பொலிஸ் பிரிவில் பரகல கிராம சேவகர் பிரிவு
காலி மாவட்டத்தில்
எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் பழைய கொலணி கிராம சேவகர் பிரிவு
மொனராகலை மாவட்டத்தில்
மொனராகலை பொலிஸ் பிரிவில் ஹின்டிக்வெல கிராம சேவகர் பிரிவில் நக்கரவத்த மற்றும் மில்லகெலவத்த
ஆகிய பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு