வெளிநாடுகளிலிருந்து இருந்து இலங்கை வருபவர்களுக்கு மற்றொரு தளர்வு தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்தால் அவர்கள் புறப்படும் நாடுகளில் செய்துகொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு இலங்கை விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனை தேவையில்லை என்றும் அவர்கள் விமான நிலையங்களிலிருந்து வெளியேற முடியும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த தளர்வு எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை