ஏ - 09 நெடுஞ்சாலையில் கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சியிலிருந்து கிளிநொச்சிக்குச் சென்று மீண்டும் வடமராட்சிக்குத் திரும்பிய முச்சக்கவரண்டியை யாழிலிருந்து மின்கம்பங்கள் ஏற்றிவந்த கனரக வாகனம் மோதியுள்ளது.
குறித்த மின்சார சபை வாகனம் மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோதே முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே படுகாயமடைந்துள்ளனர். சம்வம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்களில் ஒருவரான முச்சக்கரவண்டிச் சாரதி கரவெட்டி மேற்கு, நெல்லியடி என்ற முகவரியைச் சேர்ந்த மகாதேவன் மதுஷன் (வயது 21) என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்