Thursday 25th of April 2024 11:07:42 PM GMT

LANGUAGE - TAMIL
-
முகமாலை வர்த்தக நிலையம் முன்பு  ஒருவர் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்!

முகமாலை வர்த்தக நிலையம் முன்பு ஒருவர் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்!


நேற்று ( 17.10.2021) இரவு 07.30 மணி அளவில் முகமாலை வடக்குப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக பொருட்களை வாங்கிக் கொண்டு வந்த ஒருவர் மீது இனந்தெரியாத குழுவினர் சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதனால் தலை மற்றும் கை கால்களில் பலத்த காயமடைந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகமாலை வடக்கை சேர்ந்த தனபாலசிங்கம் விஜயகாந்த் வயது 47 என்பவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் பளை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக முகமாலை பகுதியில். சட்டவிரோத செயற்பாடுகள் களவுகள் போன்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருவதுடன், தற்பொழுது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலை தொடர்பில் கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதனை உரியவர்கள் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE