நமீபியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்கான தகுதிகாண் சுற்றின் 4வது ஆட்டம் நமீபியா - இலங்கை அணிகளுக்கிடையே இன்று நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபிய அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.அணி சார்பில் வில்லியம்ஸ் 29 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் மகேஷ் தீக்ஷனா - 3, லகிரு குமார மற்றும் வனின்டு ஹசரங்க தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
97 என்ற சுலப இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 13.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 100 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
5.1 ஓவர்கள் நிறைவில் 26 ஓட்டங்களை பெற்ற போது முன்னணி 3 விக்கெட்டுக்களை இலங்கை அணி இழந்த நிலையில் அடுத்து களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தனர்.
பொறுப்புடன் விளையாடிய அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் ஆட்மிழக்காது தலா 30, 42 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை