காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயகத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிசார், இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் நாட்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி