Wednesday 1st of May 2024 04:45:49 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோர் 5 இலட்சத்து 60 ஆயிரத்தை கடந்து அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோர் 5 இலட்சத்து 60 ஆயிரத்தை கடந்து அதிகரிப்பு!


இலங்கையில் மேலும் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 60 ஆயிரத்தை கடந்து அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான மேலும் 529 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 560,134 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 471 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 528,400 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து தற்போது சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,502 ஆக உயர்வடைந்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE