காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளருமான அமரர் சுப்பிரமணியம் சதானந்தம் (தோழர் ஆனந்தி அண்ணர்) அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் ராஜா சரஸ்வதி மண்டபத்தில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெற்றது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா கஜதீபனின் தலைமையில் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் திருமதி சதானந்தன் அவர்கள் நினைவுச் சுடரினை ஏற்றி வைத்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், தோழர் ஆனந்தி அண்ணரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.
தொடர்ந்து அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குரு, வடமாகாண அவைத் தலைவர் சி.வீ.கே சிவஞானம், தமிழ் தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் சுகு சிறீதரன் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோர் நினைவு உரைகளை நிகழ்த்தினர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்