Thursday 25th of April 2024 09:20:26 PM GMT

LANGUAGE - TAMIL
-
வட மாகாணத்தில் மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு தீர்மானம்!

வட மாகாணத்தில் மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு தீர்மானம்!


வட மாகாணத்தில் மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

இதன்காரணமாக மன்னார் மாவட்டத்தில் பண்ணையாளர்களுக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் நாடாளுமன்றில் இன்று முற்பகல் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வடக்கில் மாத்திரமின்றி நாட்டின் பல பகுதிகளில் இந்தப் பிரச்சினை காணப்படுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் வடக்கில் 3000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE