Friday 26th of April 2024 11:45:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்!


வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை ரீதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அரச உத்தியோகத்தர்களால் நாட்டிற்கு சுமை என்ற கருத்தை அரசாங்கம் விலக்கிக்கொள்ள வேண்டும், அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்தை பத்தாயிரத்தால் உயர்த்த வேண்டும், அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 65 வயதாக உயர்த்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச ஊழிர்களின் கருத்து சுதந்திரத்தை மறுக்காதே ஆகிய நான்கு விடயங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மதியம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களே கலந்துகொண்டிருந்தனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE