யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாவது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது. இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பட்டமளிப்பு வைபவத்தின் எட்டு அமர்வுகளில் 2 ஆயிரத்து 619 பேர் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
இன்றைய அமர்வுகளில் பட்டம் பெறும் பட்டதாரிகளின் விவரம் வருமாறு:-
அமர்வு 1
கலாநிதி - 01, மொழியியலில் முதுதத்துவமாணி - 01, கணக்கீட்டில் முதுதத்துவமாணி - 01, சைவ சித்தாந்தத்தில் முதுகலை மாணி - 31, மருத்துவமாணி சத்திர சிகிச்சை மாணி - 131, விவசாயத்தில் விஞ்ஞானமாணி (சிறப்பு) - 65, பொறியியல் விஞ்ஞான மாணி (சிறப்பு) - 55, சட்டமாணி 52
அமர்வு 2
புவியியலில் முதுதத்துவமாணி - 02, கல்வியியல் முதுதத்துவமாணி - 01, முது வியாபார நிர்வாகமாணி - 47,கலைமாணி (சிறப்பு) - 189, சித்தவைத்திய சத்திரசிகிச்சைமாணி - 38, தாதியியலில் விஞ்ஞான மாணி (சிறப்பு) - 24, மருந்தகவியலில் விஞ்ஞானமாணி (சிறப்பு) - 15, மருத்துவ ஆய்வுகூடவியலில் விஞ்ஞானமாணி (சிறப்பு) - 18.
அமர்வு 3
கலாநிதி - 01, சித்தவைத்தியத்தில் முதுதத்துவமாணி - 01, மெய்யியலில் முதுதத்துவமாணி - 01, சூழல்முகாமைத்துவத்தில் முது விஞ்ஞானமாணி - 14, கலைமாணி (சிறப்பு) - 132, கலைமாணி (பொது) - 05, விஞ்ஞானமாணி (பொது) - 174.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்