இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 6 இலட்சத்து 48 ஆயிரத்தை கடந்து அதிகரத்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான மேலும் 711 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 648,410ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 22,638 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை