இந்தியக் கலைஞரும் சிறந்த நடன ஆசிரியருமான கலா மாஸ்டர் இன்றைய தினம் 05.03.2022 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கலைஞர்களை சத்தித்தார்.
கலைத்திறமையை மேன்மைப்படுத்தும் முகமாக இன்றைய தினம் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விசுவமடு சனசமூக நிலையத்தில் முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்கள், மற்றும் முல்லைத்தீவு திரைப்படக் கலைஞர்களை சந்தித்தார்.
இவர்களின் கலைத்திறனை மேன்மைப்படுத்த சகல வழிகளிலும் ஒத்தாசை புரிவதாகவும் கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கலைஞர்களை இந்தியாவரை கொண்டுசெல்ல என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு