வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று சந்தித்துப் பேசினார்.
இருதரப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத தடைச் சட்ட திருத்தம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை விவகாரம் மற்றும் இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் வழிகள் குறித்து விவாதிக்க வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை இன்று சந்தித்ததாக ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான, ஜனநாயக மற்றும் வளமான இலங்கையை உறுதி செய்வதில் அமெரிக்கா தொடர்ந்து பற்றுறுதியுடன் உள்ளது எனவும் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.