Thursday 2nd of May 2024 11:40:55 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ் இராசாவின் தோட்டப் பகுதியில் மூதாட்டி அடித்து படுகொலை!

யாழ் இராசாவின் தோட்டப் பகுதியில் மூதாட்டி அடித்து படுகொலை!


யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டப் பகுதியில், தனிமையில் இருந்த மூதாட்டி அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு அடித்து படுகொலை செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த காணிக்கையம்மா ஜெயசீலி பூபதி வயது (72) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூதாட்டி இன்று மதியம் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கதிரையில் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்த பொழுது குறித்த மூதாட்டி பின் பக்கமாக வந்த மர்ம நபர்கள் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளைச் சம்பவத்திற்கு வந்தவர்களே இதனைச் செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப் படுகிறது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE