பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ் மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் இடம் பெற்ற திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல ரூபாய் பெறுமதியான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் குழுவினர் இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இதன் போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் திருட்டு சம்பவம் தொடர்பில் பல்வேறு வழக்குகள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் அச்சுவெலி போலீஸ் பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆட்கள் இல்லாத வீடுகளில் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது ஏழு லட்சம் ரூபாய் அதிகமான இலத்திரனியல் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களிடமிருந்து எரிவாயு சிலிண்டர், எரிவாயு அடுப்பு, பெறுமதியான தொலைக்காட்சி பெட்டி, மோட்டார் இயந்திரம், கேக் அடிக்கும் இயந்திரம், உட்பட பல்வேறு பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்