குருந்தூர்மலை ஆக்கிரமிப்பு தொடர்பில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டிருந்த பேராட்டம் தொடர்பில் மேலும் ஒருவர் முல்லைத்தீவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருந்தூர்மலை போராட்டம் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு பொலிசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பலபலநோக்குக் கூட்டுறவுச்சங்கத் தலைவர் இரத்தினராசா - மயூரன் ஆகியோரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு