இன்றுமுதல் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் யாம்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடைபெறும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இதுவரை 7 பேர் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களது இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டே தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்றிலிருந்து குறித்த பரிசோதனை யாழ்.பல்கலை மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்