கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னர் கம்போடியாவில் இருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கு வந்த குடும்பஸ்தர் (58 வயது) இன்று உயிரிழந்த நிலையில் அவரின் இரத்த மாதிரிகள் உடற்கூட்டு பரிசோதனைக்கான அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் முட்டு, காய்ச்சல், தடிமன் போன்ற நோய்கள் காணப்பட்டுவந்திருக்கின்றார். இன்று அதிகாலை 2 மணியளவில் கடும் சிரமப்பட்டமையால் அவரை நெல்லியடி தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.
குறித்த வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர்.
இருப்பினும் இடைநடுவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரின் மரணம் கொரோனா தொற்றினால் இடம்பெற்றதா? என்பது தொடர்பிலான ஆய்வறிக்கை இன்று மாலையே வெளிவரும் என்றும் அதன் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கரவெட்டி