முல்லைத்ததீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கேப்பாபிலவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினரில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கேப்பாப்புலவு கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படையினா் 90 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 10 போ் தொற்றுக்குள்ளாகி உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவா்கள் வெலிகந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இதனையடுத்துநேற்று மேலும் 40 போ் பரிசோதனை செய்யப்பட்டனா். இவா்களில் கடற்படையினர் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள்பணிப்பாளர் வைத்தியர் எஸ்சுகந்தன் தெரிவித்துள்ளாா்
இதனையடுத்துஇவா்கள் 5 பேரும் வெலிகந்தை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவா் கூறினாா்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு