Friday 26th of April 2024 10:53:03 AM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னாரில் காணி கிளை அலுவலகம் திறந்து வைப்பு!

மன்னாரில் காணி கிளை அலுவலகம் திறந்து வைப்பு!


மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் காணி தொடர்பான தகவல்களை பெறுவதற்கான நடை முறைகளை மேற்கொள்வதற்கான சேவைகளை முன்னெடுக்கும் முகமாக UNHCR நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஜசாக் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் அமைக்கைப்பட்ட காணிக்கிளைக்கான கட்டிட திறப்பு விழா நிகழ்வு செவ்வாய் கிழமை மதியம் 3 மணியளவில் மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தலைமையில் இடம் பெற்றது

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் த.சி.ஏ.மோகன்றாஸ் ,சிறப்பு விருந்தினர்களாக UNHCR நிறுவனத்தின் வடமாகாண பொறுப்பதிகாரி வே.பிரபாகரன் மற்றும் ஜசாக் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் , UNCHER நிறுவன ஊழியர்கள் , ஜசாக் நிறுவன ஊழியர்கள், உதவி அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் , காணி உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலக ஊழியர்கள் என பலரும் கலந்து கட்டிடத்தை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்ததுடன் கட்டிடத்தின் ஆவணங்களையும் வைபவரீதியாக பிரதேச செயலாளரிடம் வழங்கி வைத்தனர்.

அதே நேரத்தில் குறித்த காணிக்கிளையின் ஊடாக எதிர் வரும் காலங்களில் மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் காணி ஆவணங்கள் பெறுதல், காணி வழங்குதல் ,வீட்டுத்திட்டம் தொடர்பான தேவைகளை நேரடியாக பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE