மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை அமைதியான முறையில் தபால் மூல வாக்களிப்பு இடம் பெற்றது.
தபால் மூல வாக்களிப்பின் முதல் நாளான நேற்று திங்கட்கிழமை சுகாதார, மருத்துவ அதிகாரிகள் காரியாலயத்தின் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள், குடும்பநல சுகாதார அதிகாரிகள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் நேற்று தபால் மூலம் வாக்களித்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன் கிழமை ஆகிய இரு நாட்களிலும் ஏனைய அரச நிறுவனங்களின் ஊழியர்களும் எதிர் வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் பாதுகாப்புப் பிரிவினரும் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்கள் ஊடாக வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் நேற்றும், இன்றும் அமைதியான முறையில் தபால் மூல வாக்களிப்புக்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்