கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அதன்போது தபால்மூல வாக்கெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
மாவட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்பதுடன், முறையான சுகாதார முறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்ற விடயத்தினையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி