கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஏ9 வீதியில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் வீதியை கடக்க முற்பட்டபோது வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்த அரச பேருந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. படுகாயமடைந்த முதியவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி